திங்கள், 30 செப்டம்பர், 2013

அன்னை தெரேசா கூறிய பெரும் வெற்றிக்கான 8 சூத்திரங்கள்.




1) எளிய கனவுகள் போதும் அவற்றை அழுத்தமாகச் சொல்லிப் பழகுங்கள்..

உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ
மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும்.

ஆரம்பத்தில் மிக எளிமையான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் அவற்றை அடைந்தபின் அடுத்த செட் கனவுகளைக் காணலாம். என்ன அவசரம்?

2) ஆனந்தமாக வாழ்வதற்குதான் எல்லோருக்கும் விருப்பம், ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் சில
சங்கடங்களை சந்திக்கவேண்டியிருக்கும்.

நீங்கள் ஒரு நல்ல லட்சியத்தை நோக்கிச் செல்லும்
வழியில் பல அசௌகர்யங்கள், சங்கடங்கள், தடைகள்
எதிர்ப்படலாம். அவை உங்களுகடைய பயணத்தையே
கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,

எல்லோரையும் அரவனைத்து அனுசரித்துச் செல்லுங்கள்

3) பொறுமை அவசியம் :

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு.. ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது.

பொறுத்திருங்கள் சூழ்நிலை எப்படிபட்டது என்று கவனமாக யோசித்து உங்களுடைய நேரத்தையும் செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்..

4)சந்தேகப்படுங்கள்:

சந்தேகம் என்றால் அடுத்தவர்கள் அல்ல உங்களை நீங்களே!,

அன்னை தெரசா தன்னுடைய எண்ணங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

அதேசமயம் அவரிடம் அசட்டு நம்பிக்கையை கிடையாது.எதிலும் இறங்குவதற்கு முன்னால் தன்னைத்தானே சந்தேகக் குணத்துடன் கேள்விகளை கேட்டுக்கொள்வார்.

பலவிதமான பரீட்சையில் ஜெயித்து பிறகுதான் முதல் காலடியே எடுத்துவைப்பார்.அதன் பிறகு வெற்றி நிச்சயம்!

5) தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம் :

எந்த வேலையும் செய்வதற்கு இரண்டு வழிகள் உண்டு. நம் இஷ்டப்படி செய்யலாம். அல்லது , இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நமக்கு என்று நமக்கு நாமே வரையறுத்துக்கொண்டு அந்த வரம்புக்குள் ஒழுக்கமாகச் செயல்படலாம்.

அன்னை தெரசா இதில் இரண்டாம் வகை..

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கலாம். என்ன சாப்பிடலாம், எத்தனை மணிக்கு என்ன வேலை செய்யலாம், என்பதில் தொடங்கி சகலத்திலும் தனக்குத்தானேகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அவற்றை விடாமல் பின்பற்றியவர் அவர் முணு முணுத்துக்கொண்டு அல்ல..ஒழுங்குமுறையோடு வாழ்வதில்தான் என்னுடை சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லியபடி, சிரித்துக்கொண்டே!

6) எல்லோருக்கும் புரியும் மொழியில் பேசுங்கள்:

அறிவுஜீவிகள் பலர் அடுத்தவர்களுக்கு புரியாதபடி சிக்கலாகப் பேசினால்தான்பெருமை என்று நினைக்கிறார்கள்,உண்மை அதுவல்ல

7) மௌனம் பழகுங்கள்:

பல நேரங்களில், மொழிகள் கூட அநாவிசயம்.ஒரு சின்னப் புன்னகை, அன்பான முதுகுதட்டல்,பாசம் பொங்கும் ஒரு முத்தம் ,என இடத்துக்கு ஏற்ப உங்களது உடல் மொழியால் மௌனமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள், உடனடிப் பலன்கள் கிடைக்கும்.

8 ) யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்:

பொதுவாக நாம் ஒருவரை சந்தோஷப்படுத்த நினைத்தால் இன்னொருவரை அலட்சியப்படுத்தும்படி நேர்ந்துவிடுகிறது.

இந்த பிரச்னைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி.

நமது செயல்பாடுகள் யாரிடம் என்னவிதமான தாக்கங்கள் உருவாக்கக்கூடும் என்று பல கோணங்களில் இருந்து யோசிப்பதான்.

இதற்காகச் செலவிடும் சில நிமிடங்களை வீண் என்று நினைக்காதீர்கள், அவைதான் உங்களைப் பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்..

தாலி கட்டுவது எதற்காக?




தேவைதானா இதெல்லாம்? என்று கேள்வி கேட்டே பழகிவிட்ட நமக்கு, நம் முன்னோர் சிந்திக்காமல் எதையோ உருவாக்கிவிட்டார்கள் என்ற மனப்பிரம்மையும் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கிறது.

பிறப்பிலிருந்து இறப்பு வரை பல வழக்கங்களை நம் பாரம்பரியமாக உருவாக்கி, அதை நடைமுறையிலும் சாத்தியமாக்கிய பெருமை நம் முன்னோர்களைச் சேரும். அவர்களின் புரிதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு பதிவு…

தாலி என்பது ஒரு புனித நூல். அதனை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்கவும் வேண்டும். ஆனால் இன்றோ இது வழக்கத்தில் இல்லாத நடைமுறையாக மாறிவிட்டது. பெண்கள், தாலி என்று சொல்லிக் கொண்டு தடிமனாக ஒரு தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்வதே இதற்கு காரணம்.

உண்மையில் தாலி என்பது நூலில்தான் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்க வேண்டும். இந்த புனித நூல், சம்பந்தப்பட்ட இருவரின் சக்திநிலைகளைப் பயன்படுத்தி, தாந்திரீக வழியில் உருவாக்கப்படுகிறது.
அதாவது, ஆணின் குறிப்பிட்ட ஒரு நாடியையும் (சக்திநிலை) பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் இணைத்து, அந்த புனித நூல் ஒரு குறிப்பிட்ட வழியில் தயாரிக்கப்பட்டு பிறகு அணிவிக்கப்படுகிறது.

அதன் பின் அந்த ஆணும் பெண்ணும் உடலளவில் இணையும்போது அந்த இரு உடல்களின் இணைப்பு மட்டுமல்ல; அந்த இருவரின் சக்திநிலையும் கூட பின்னிப் பிணைந்த சங்கமமாக இருக்கும். இப்படி இருவரின் சக்திநிலைப் பிணைப்பு சாதாரணமானதல்ல.

இதுபோல் செய்யும்போது அந்த இணைப்பை, உறவை சுலபத்தில் முறிக்க இயலாது. அப்படியும் வலிய முறித்தால் குறிப்பிட்ட இருவருக்கும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இப்படித்தான் முன் காலத்தில் விவாகங்கள் நடத்தப்பட்டன.

இளம் வயதிலேயே, அதாவது 10, 11 வயதிலேயே விவாகங்கள் செய்து வைக்கப்பட்டன. இதுபோன்ற சக்திநிலை பிணைப்பால், அவர்களின் கவனம் தவறான வழியில் செல்லாமல் எப்போதும் பாதுகாப்புடன் காக்கப்பட்டது. இன்றைய மனிதர்களுக்கு இவை கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

அந்த உறுதியான பிணைப்பு கணவன்-மனைவி இருவருக்கும் ஒரு அபரிமிதமான சக்தியைக் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சக்தி ஒரு சமநிலையிலும் இருந்ததால் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்த மனச் சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிந்தது.
இவர் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு அவர்களிடம் உறுதியான பிணைப்பு, பந்தம் இருந்தது. இப்போது காணப்படும் பாதுகாப்பற்ற தன்மை பாரதத்திற்கு மிகவும் புதிதான ஒரு சமாச்சாரம்.

கணவன் என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ, மனைவி என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்கிற பாதுகாப்பற்ற உணர்வுகள் முன்பு இருந்ததில்லை. ஆனால் தற்போது தாலி அல்லது மங்கள சூத்திரம் என்பது வெறும் சடங்காகி விட்டது.
பெரும்பான்மையோர் காலையில் எழுந்தவுடன் தேடும் பொருளாகிப் போனதில் வியப்பில்லை.

நீங்கள் கட்டவிருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்.





Design your house plan blueprints online with smallblueprinter, then take a 3D walkthrough your design, check out an isometric view and print out your plan.

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்தால் நன் றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நம க்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடி வம் கொடுத்து வீடுகட்ட பிளான் உரு வாக்கி கொடுக்கிறது 

ஒரு தளம் இதை ப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆ னால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதி தாக வீடு கட்ட விரும்பு பவர்களுக்கு வீட்டுக்கா ன பிளான் (வடிவமை ப்பு) உருவாக்கி கொடு க்க ஒரு தளம் உதவுகி றது.

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design, Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களி ல் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு த்துக்கொள்ள வேண்டும் அடுத்து வல து பக்கம் இருக்கும் Wall டூலை பயன் படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக் க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத் துக் கொள்ளலாம். Transform என்ற டூ லை பயன்படுத்தி எங்கு வேண்டுமானா லும் நகர்த்தலாம் வடிவ த்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொ த்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பய னுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி (More Info Links) :

Design your own house plan:

http://www.smallblueprinter.com/sbp.html

FloorPlanner :

http://www.smallblueprinter.com/floorplan/floorplan.html

Garden Planner Online:

http://smallblueprinter.com/garden/planner.html

Download an offline version:

http://www.smallblueprinter.com/download.html