ஞாயிறு, 21 ஜூலை, 2013

நபிகள்நாயகம் சொன்னது

இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.

அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நான் நன்றாகப் பார்த்துக் கொண்ட
ேன்.

கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று நபிகள் நாயகத்திடம் ஒருவர் கேட்டார்.

நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை வாலிபனாக்கும் எண்ணத்தில்.

நீ பார்த்துக் கொண்டதோ அவர்கள் மரணம் வரை அவர்களைப் பராமரிக்கும் எண்ணத்தில்.

அவர் உன்னை வாழ்வுக்காக வளர்த்தார்.

நீ அவரை சாவுக்காக பராமரித்தாய்.

இரண்டும் ஒருபோதும் ஈடாகாது.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக